Tuesday, September 8, 2009

என்னது ரைற்றானிக் மூழ்கிற்றா????? பய் கோபி

ரைற்றானிக் கப்பல் இன்றைய காலகட்டத்தில் மூழ்கினால் என்னென்ன அறிக்கைகள் கிடைக்கப்பெறும் எனப் பாருங்கள்...
  • அமெரிக்கா...
சுதந்திரத்தை நோக்கி வந்துகொண்டிருந்த கப்பலொன்று தீவிரவாதிகளால் தாக்கப்பட்டுள்ளது. நாங்கள் அமைதியாக இருக்கமாட்டோம். அவர்களுக்கு உரிய பாடத்தை புகட்டுவோம். பின்லேடனுக்கு எச்சரிக்கை விடுக்கிறோம். தேடி அழிப்போம். அல்-குவைதா வலையமைப்பை எங்கிருந்தாலும் தேடி அழிப்போம்.
  • இங்கிலாந்து...
நான் அமெரிக்க ஜனாதிபதியுடன் கதைத்துள்ளேன். மூழ்கிக் கொண்டிருக்கும் ரைற்றானிக், முஸ்லிம் தீவிரவாதிம் அழிக்கப்பட வேண்டும் என்பதற்கான ஓர் எடுத்துக்காட்டு என்பதை இருவரும் ஏற்றுக் கொண்டுள்ளோம். இதை முழு உலகமும் எதிர்க்க வேண்டும்.
  • இஸ்ரேல்...
இது ஹமாஸ் மற்றம் பிற தீவிரவாத வலையமைப்பால் செய்யப்பட்டதென்பதற்கான ஆதாரம் உள்ளது. இது விபத்து அல்ல. ஹமாஸ் தீவிரவாதிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதலாலேயே இடம்பெற்றது. இப்போது நாங்கள் பலஸ்தீனர்கள் மீது ஊரடங்கை பிறப்பிப்போம், கைது செய்வோம், அடிப்போம், கொலை செய்வோம், அவர்களின் வீடுகளை தரைமட்டம் செய்வோம்.
  • இந்தியா...
இது பாகிஸ்தான் உளவு அமைப்பின் தலைமையில் அந்த நாட்டு தீவிரவாதிகளின் நடவடிக்கை தான். பாகிஸ்தான் தீவிரவாதிகளின் கடவுச் சீட்டுக்களை கண்டெடுத்துள்ளோம். அத்தகைய நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆகவேண்டும்.
  • இலங்கை...
விடுதலைப் புலிகளை அழித்து விட்டாலும், சிலர் பதுங்கி இருக்கின்றனர். அவர்களின் சர்வதேச வலைப்பின்னலின் செயற்பாடே இது. இந்த சம்பவம் விடுதலைப் புலிகளின் சர்வதேச வலைப்பின்னலை அழிக்க சர்வதேச நாடுகள் எமக்கு உதவ வேண்டும் என்பதை உணர்த்தி நிற்கிறது.
  • ஐக்கிய நாடுகள் சபை...
ஓ! இது நடந்து விட்டது. இது நடந்தமைக்காக நாங்கள் வருந்துகிறோம்.
  • கப்பல் பயணிகள்...
ஐயோ... காப்பாற்றுங்கோ... அது ஓர் பனிப்பாறை... காப்பாற்றுங்கோ... காப்பா..

1 comment:

Anonymous said...

அது ஏன் நீங்கள் எல்லாம் தமிழை இப்படி பாடாய்ப்படுத்துகிறீர்கள்? டைட்டானிக் என்று எழுதினால் என்ன மூழ்கியாப்போய்விடும்?