Monday, September 21, 2009

பெண்களே ஜாக்கிரதை

இன்று வரை காதல்ல மாட்டிக்காத பொண்ணுங்களுக்கு... ஆண்களை பற்றி ஒரு இல்ல பல ஐடியா
  • 1.நல்லா தலை முடிக்கு விதவிதமா ஜெல் போட்டுப்பான். சிலநேரம் முடிட கலரைக் கூடமாத்துவான் (நரையை மறைக்கவும் தான்). சிம்பு மாதிரி நெனச்ச நேரம் நெனச்ச மாதிரி முடியை வச்சுப்பான்..அதுல மயங்கி நீங்க விழுந்துட்டீங்கன்னா அப்புறம் வாழ்க்கையே கரை படிஞ்சிடும்.
  • 2.பொய்க்கு துயரக் கதையெல்லாம் சொல்லி, பார்த்தாலே நமக்கு அழுகை வர்றமாதிரி மூஞ்சை வச்சிட்டு அனுதாபம் தேடி லவ் லெட்டர் நீட்டுவான்..வாங்கிட்டீங்கன்னு வச்சிக்குங்க..அப்புறம் அந்தத் துயரக்கதையையெல்லாம் நீங்க சொல்லிட்டுத் திரிவீங்க..
3.நாலஞ்சு நாளா உங்களை லுக்கு விட்டுகிட்டு பின்னால திரிஞ்சவன் திடீர்ன்னு ஒருநாள் நீங்க (அன்னிக்கு பார்த்து குளிச்சு, அழகா ட்ரஸ் பண்ணி அப்படியே முந்தானை காத்துல ஆட, வாசனையெல்லாம் பூசி, தேவதை பீலிங்கோட வந்திருப்பீங்க) வர்றதப் பார்த்தும் கண்டுக்காம இருப்பான்.மூஞ்சைத் திருப்பிப்பான்.நீங்க இதைப் பார்த்துட்டு 'பய புள்ளைக்கு என்ன ஆச்சோ'ன்னு பரிதாபப்பட ஆரம்பிப்பீங்க.அந்தப் பரிதாபம் லவ்வுல முடியும்.. ஜாக்கிரதை...
  • 4.உங்களுக்கு மியூசிக் ல விருப்பமிருக்குங்குறது அவனுங்களுக்குத் தெரிஞ்சிடுச்சின்னு வச்சிக்குங்க..அப்புறம் ஏதோ ஒரு மியூசிக்இன்ஸ்ட்ரூமெண்ட (அட்லீஸ்ட் ஒரு புல்லாங்குழல்) எப்பவும் தன் கூடவே வச்சிட்டுத் திரிவான் மனசுக்குள்ள 'ஜே ஜே' மாதவன்குற நெனப்புல. நீங்களும் பூஜா மாதிரி விழுந்திட்டீங்கன்னு வச்சிக்குங்க..அப்புறம் உங்களுக்குக் கூஜாதான்..
5.ரொம்ப நாளைக்கு சைட் அடிச்சிட்டு பின்னாலேயே சுத்திட்டிருப்பான். அவனோட பிரண்டுக்கிட்ட உங்களுக்குக் கேக்குற மாதிரி 'மச்சான் ரோபோல நடிக்கக் கூப்பிட்டாக..நான் முடியாதுன்னுட்டேன்.மணிரத்னம் என் வீட்டு வாசல்ல தவம் கிடக்கிறாக கால்ஷீட் கேட்டு'ன்னெல்லாம் பீலா விட்டுப்பின்னாலேயே தொடர்ந்து ஒரு வாரம், பத்துநாள்னு வந்துட்டிருந்தவன் திடீர்னு ஒருநாள் காணாமப் போயிடுவான்.அப்பப் பார்த்து நீங்களும் தேட ஆரம்பிச்சு ,நிஜமாவே ரோபோல நடிக்கப்போயிட்டாகளோன்னு நோக ஆரம்பிச்சு, அவனையே நெனைக்க ஆரம்பிச்சு, அஞ்சாவது நாள்ல முன்னாடி வந்து நிப்பான் பாருங்க.. அப்பப்பார்த்து அதிர்ச்சியாகி நீங்க 1 CM புன்னகையை விட்டீங்கன்னு வைங்க.. அவன் வலைக்குள்ள விழுந்திட்டீங்கன்னு அர்த்தம்..
  • 6.கொஞ்ச நாளாவே கவனிச்சிட்டு வர்றீங்க.. நீங்க கண்டுக்காத பையன் திடீர்ன்னு ஒருநாள்லிருந்து 'தொட்டி ஜெயா'சிம்பு ரேஞ்சுக்கு இருட்டுக் கலர்கள்லயே ட்ரஸ் பண்ணிட்டு வர்றான்..அது அவனுக்குக் கொஞ்சம் கூடப் பொருந்தலைன்னு நெனச்சு நீங்க அன்பா அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிட்டீங்கன்னு வைங்க. அவளோதான் ..உங்க வாழ்க்கையே ப்யூஸ் போன பல்பு கணக்காஆகிடுமுங்க..
7. அவன் இடுப்பு சைஸ் 29 இருக்கும்..ஆனா 36 சைஸ் ஜீன்ஸ் போட்டுட்டுப் பின்னால திரிவான்.. எப்பக் கழண்டு விழுமோன்னு (இன்றஸ் ஓட) நீங்க பார்க்க ஆரம்பிச்சிட்டீங்கன்னு வைங்க.. நீங்க கவுந்துட்டீங்கன்னு அர்த்தம்..
  • 8.அப்புறம் அதுல அவன் பேர்ஸ் பார்த்தீங்கன்னா அரை அடி தள்ளிட்டே,ரொம்பப்பெருசா இருக்கும்..பூராக் காசுடி ன்னு ஏமாந்துடாதீங்க..நாலஞ்சு தினகரன்,வீரகேசரி யா எல்லாம் சுருட்டி,மடக்கி வச்சி பந்தா காட்டிட்டிருப்பான்பையன்..
9.பயபுள்ளைக்கு எங்கிட்டும் போக வேண்டிய அவசியமிருக்காது.. வீட்டிலயும் சொல்லிப் பிரயோஜனமில்லைன்னு தண்ணி தெளிச்சு நேர்ந்து விட்டிருப்பாங்க.. ஆனாலும் பார்த்தீங்கன்னா பையன் உங்க முன்னாடி ட்ராவலிங் பேக்கோட அலைவான்..'இதை எதுக்குடி இவன் சொமந்துட்டுத் திரியுறான்'ன்னு உங்க மனசுல கேள்வி எழும்ல.. அதுதான் அவன் உங்க மனசுல அவன் உட்கார்றதுக்கான நாற்காலி.. கேள்விக்கெல்லாம் இடம் வைக்காதீங்க..
  • 10.ஏதோ பெரிய ஆபிஸர் மாதிரி ட்ரஸ் பண்ணிட்டு ,டையை நீங்க பார்க்குறமாதிரி பாக்கெட்ல வச்சிட்டுத் திரியுறான்னு வச்சிக்குங்க.. உடனே நம்பிஏமாந்திடாதீங்க. அது பூராம் யாராவது ஏமாந்த ஆபிஸருங்கக்கிட்ட இருந்து சுட்டதா இருக்கும்.
  • 11.எப்பப்பார்த்தாலும் சிரிச்சிட்டே இருக்கிறவனை ஒருபோதும் நம்பிடாதீங்க..மெண்டலாவோ,லூசாவோ இருக்கச் சான்ஸ் உண்டு.
  • 12.திடீருன்னு ஒரு நாளைக்கு பாத்ரூமுக்குப் போடுற ரப்பர் சிலீப்பர் போட்டுட்டுவந்து நிப்பான்..தப்பித்தவறிக் கூட ஏனுன்னு கேட்டுடாதீங்க..அப்புறம்வாழ்க்கையில நாம என்னத்தைக் கண்டோம்? மீன் இன்னிக்குச் செத்தாநாளைக்குக் கருவாடு'ன்னு தத்துவம் பேச ஆரம்பிப்பான்.அப்புறம் நீங்க ஏமாந்த பொண்ணாகிடுவீங்க.
  • 13.பையன் பெரிய சைஸ்க்குவாட்ச் கட்ட ஆரம்பிக்கிறது, ஸ்போர்ட்ஸ் ஷூ போடறது, கூலிங்கிளாஸ்போட்டுக்குறது, அழகா தொப்பி போட்டுக்குறதுன்னு இருந்தா கண்டுக்கவே கண்டுக்காதீங்க.. எல்லாம் வயசை மறைக்கிறதுக்காகத்தான். அப்படியும் பின்னால வந்தான்னா 'என்ன விஷயம் அங்கிள்'னு கேளுங்க.. பையன்அந்தப்பக்கம் எட்டிக் கூடப் பார்க்க மாட்டான்.
இன்னும் நிறைய இருக்கு..ஆனாலும் பொண்ணுங்களா...காதல்ல விழுந்திடாம இருக்கிறதுக்கு இது கொஞ்சமும் கூடப் போதும்.அதனால நல்லாப் படிச்சு அம்மா,அப்பா பார்க்குற மாப்பிள்ளையைக் கல்யாணம் பண்ணிக்குங்க..
  • என்னது? சில பொண்ணுங்க காதலிச்சிட்டிருக்காங்களா? அவங்களுக்கும்அட்வைஸ் பண்ணனுமா?. வுடுங்கம்மா நான் அந்த வழிக்கே வரல ஏற்கனவே வாங்கினது வலிக்குது
(பசங்களா..நீங்க சொல்லித் தந்த மாதிரியே உங்களைப் பத்திச்சொல்லிட்டேன்..இப்பயாச்சும் என் கழுத்துல வச்சிருக்குற கத்தியை எடுங்க )

No comments: