Saturday, September 5, 2009

"ஆஸ்கார்" வெல்ல போகும் விஜயகாந்தின் அடுத்த படம்.....

  • சட்டை பேண்ட் என எல்லாம் கிழிந்து விஜயகாந்த் ஆபிஸில் இருந்து வெளியே ஓடுகிறார் ஒரு இளைஞர்.

அப்படி ஒருத்தன் வெளிய ஓடியும் தைரியமா இன்னொருத்தன் உள்ளே போனான். கேப்டன் "வாங்க உட்காருங்க" அந்த இளைஞரும் உட்காருகிறார். "நீங்க என்ன மாதிரி கதை சொல்ல போறீங்க?" "சார் இது ஒரு கிராமத்து காதல் , மற்றும் உணர்வுபூர்வமான கதை சார்" "ம்ம் சொல்லுங்க"

  • "சின்ன வயசியிருந்து நீங்க கோவில் தான் வளருறீங்க. கோவில் வேலைகளை எல்லாம் பறந்து பறந்து செய்றீங்க. கோவில விட்டா உங்களுக்கு வேற உலகமே இல்ல.உங்க பேரு "கோவில் கிளி"

"என்னது கிளியா" கோபம் கலந்த ஆச்சர்யத்துடன் கேப்டன் "ஆமா சார். அப்படி பட்ட உங்க வாழ்க்கையில ஒரு பொண்ணு உள்ள வர்ரா அவ பேரு "வெட்டு கிளி" "ம்ம்ம்ம் அப்புறம்..." பேப்பர் வெயிட்டை கையில் எடுக்குறார் கேப்டன்.

  • "ஒரு கட்டத்தில வில்லன் வெட்டுகிளியை கெடுக்க வரும் போது வெட்டுகிளி அருவாமனையால ஒரே வெட்டா வெட்டிடுறா. அப்ப நீங்க வர்ரீங்க. உங்ககிட்ட வில்லன் பொணத்த பார்த்துக்க சொல்லிட்டு போலீஸ்கிட்ட போறேன்னு போறா வெட்டுகிளி. ஆனா போனவ போனவ தான். திரும்பி வரவே இல்ல. இரண்டு நாள் கழிச்சு பொணத்தோட நாத்தம் தாங்க முடியாம போலிஸ் வந்து உங்கபிடிச்சுபோயிடுது. சார் இந்த படத்தோட தலைப்பை கேளுங்களேன்"

கேப்டன் ஒன்றும் சொல்லாமல் நெற்றியில் கை வைத்து உட்கார்ந்து கொண்டிருக்கிறார். "சார் நீங்களாவது கேளுங்களேன்" கேப்டன் மச்சானிடம்.... "சார் நீங்க?" ஆபிஸ் பாயிடம்....

  • கேப்டன் பொறுமையிழந்து "டேய் சொல்லித்தொலடா..."

"எழவு காத்த கிளி" என்று முடிக்கும் போது... கேப்டன் அவன் மூக்கில் ஒரு குத்து விட, அவன் இரத்தத்துடன் "சார் இந்த கதை பிடிக்கலன்னா "யானை பசிக்கு சோள பொறி"ன்னு இன்னொரு கதை இருக்கு அதுவேணா கேட்குறீங்களா?" என்ற போது..

  • வாயில் ஒரு குத்து...வாயில் இரத்தத்துடன் "சார் விடுங்க சார் நீங்க இல்லைன்னா வேற யாருமில்லையா என்ன? நான் சரத் சார்கிட்ட போறேன் "ஓட்டுல சோத்த போட்டா ஆயிரம் காக்கா" என்று முடிக்கும் முன் பேப்பர் வெயிட்டை கேப்டன் தூக்கி அடிக்க....அவனும் வெளியே ஓடி போகிறான்.

நெக்ஸ்ட்ட்ட்ட்ட்ட் என்று குரல் கொடுக்க அடுத்தது ஒருத்தர் வரார். "நீங்க??" கேப்டன் "சார் நான் பேரரசு சாரோட அஸிஸ்டெண்ட் சார்" "அட பரவாயில்லையே சொல்லுங்க என்ன கதை கொண்டு வந்திருக்கீங்க?" "சார் சொல்றத அப்படியே இமேஜின் பண்ணி பார்த்துங்க சார்...... "பாருங்க சார் முதல்ல சார் சின்ன கவுண்டர் மாதிரி ஒரு ஓபனிங் சார்.... "கண்ணு பட போகுதய்யா"ன்னு எல்லாரும் பாடி ஆரத்தி எடுக்குறாங்க சார்..

அங்கிருந்து அப்படியே கட் பண்ணா சார் நீங்க விமானத்தில போறீங்க சார் அங்க சார் ஹாலிவுட் ரேஞ்சுக்கு ஒரு பைட்டு சார். ஆனா வில்லன் Hacksaw ப்ளேடால வில்லன் ப்ளைன்ன அறுத்துடுறான் சார்.. ஆனா சார் நீங்க சார் பைலட் இல்லாம சார் விமானத்தையே ஓட்டுறீங்க சார்.
<span title=விமானம்1" border="0">
நீங்க சார் செத்துட்டதா நினைக்கிறாங்க சார் வில்லன் க்ரூப். ஆனா சார் நீங்க பாராசூட்ல ஆக்ரோஷமா தப்பிச்சு வர்ரீங்க சார்..
நீங்க வர்ர ஆக்ரோஷத்தப் பார்த்துட்டு வில்லன் க்ரூப் மட்டும் இல்ல சார் தியேட்டரே பயப்படுது சார். ஆனா சார் விதி வலியது சார். அந்த பாராசூட் நேரா நடு கடல்ல சார் விழுந்திடுது சார்.
  • அதுல பாருங்க சார் உங்களுக்கு ஒரு லக் சார்... பக்கத்தில டைட்டானிக் கப்பல் சார். நடுகடல்ல நாயர்கடையில சார் பேசஞ்சருக்கு "டீ" வாங்கி கொடுக்க நிக்குது சார். அதுல ஏறி சார் நீங்க தப்பிச்சிறீங்க சார். அங்க சார் உங்க ஹிரோயின் இருக்காங்க சார். அவுங்களோட அப்படியே ரோமான்ஸ் சார்...
அப்படியே கப்பல பொள்ளாச்சிக்கு விடுறோம் சார். ரோஸோட "தந்தன தந்தன தை மாசம்..."ன்னு ஒரு டூயட் சார். ரொம்ப டீசெண்டான பாட்டு சார்.
  • ஆனா பாருங்க சார் கப்பல் ஒரு பெரிய பனிகட்டியில இடிக்குது சார். எல்லோரும் தண்ணியில விழுந்திறாங்க சார். நீங்க சார் எல்லாரையும் காப்பாத்திறீங்க சார். ஆனா பாருங்க சார். ஒரு பெரிய பார்க்கவே பயமுறுத்துற இராட்சத திமிங்கலம் உங்க கிட்ட வருது சார்.
பக்கத்தில சுவரு வேற இல்ல சார். ஆனா நீங்க விடல சார். தண்ணில போட்றீங்க சார் ஒரு பெரிய பைட்டு.........விடுறீங்க சார் சைடுல ஒரு குத்து. அதுக்கு அப்படியே பொறி கலங்கி போகுது சார்.... அது கண்ணுக்கு அப்படியே மூணு மூணா தெரியிறீங்க சார்...அதுவும் போலீஸ் ட்ரெஸ்ல சார். அப்படியே அத மன்னிச்சு விடுறீங்க சார். கரைக்கு போய் எல்லாரும் ட்ரெயினை புடிக்கிறீங்க சார். அங்க ஃபுட்போட்ல வர்ர பசங்ககிட்ட சார் "இந்த மாதிரி தொங்கிட்டு வந்தா டிரைவருக்கு சைடி மிரர் மறைக்கும்"ன்னு அட்வைஸ் பண்றீங்க சார். உடனே அவுங்க திருந்தி உங்களுக்கு உதவியா வராங்க சார்.
  • ஒரு வயசான அம்மா இரயில்ல சார் கஷ்டப்பட்டு சுண்டல் வித்துட்டு வராங்க சார். அத பார்த்துட்டு உங்களுக்கு அப்படியே மனசு இளகி சார் ஐஞ்சு ரூபாய்க்கு சுண்டல் வாங்கி ஒண்டியா திங்கிறீங்க சார்.
அந்த வயசான அம்மா சார் உங்கள கட்டி பிடிச்சு சார் "எம்.ஜி.ஆருக்கு அப்புறம் நீ தான்ய்யா"ன்றாங்க சார், அங்க வைக்குறோம் சார் ஒரு பாட்டு. இரெயிலே ஆடுது சார் உங்க பாட்டுக்கு. ஆனா சார் பாட்டு முடிஞ்சுதுக்கப்பறம் தான் சார் தெரியுது வில்லன் க்ரூப் ஒரு சைடு தண்ட வாளத்தை உடைச்சுடாங்கன்னு.
  • இரயில் மேல ஏறி தாவுறீங்க சார் ஒரு தாவு...போறீங்க சார் அப்படியே டிரைவர் சீட்டுக்கு.... போய் தூக்குறீங்க சார் உங்க ஒரு கால.. நிக்கிறீங்க சார் ஒரு சைடு முட்டு கொடுத்து....உங்க வெயிட்டுக்கு சார் இரயிலே ஒரு சைடு சாயுது சார்.
<span title=டிரெயின்2" border="0">
துண்டான ஒரு சைடு தண்டவாளத்தை இரயில் தாண்டுன உடனே வைக்கிறீங்க சார் இன்னொரு கால கீழ....
டிரெயின் முன்ன மாதிரி நேரா ஓடிடுது சார். அங்க வைக்குறோம் சார்ர்ர்ர்......
  • "போதும் தம்பி போதும்...நீங்க இது வரைக்கும் சொன்ன கதையிலேயே எனக்கு பிடிச்சு போச்சு இனிமே நேரா சூட்டிங் சார்...." கேப்டன் அந்தர்பல்டி அடிக்கிறார்.
"இல்ல சார் இப்ப இண்டர்வெல் வரைக்கும் தான் சார் வந்திருக்கோம் இன்னும் பாதி கதை இருக்கு சார்" என்றவுடன் கேப்டன் "என்னது இன்னும் பாதி கதை இருக்காஆஆஆஆஅ" என்றபடி கேப்டன் மூர்ச்சையாகிறார்.....

6 comments:

சதீஷ் said...

ரொம்ப நல்லாவே சிரிச்சோம்...
ஹி ஹி ஹி ...

Anonymous said...

fantastic

Unknown said...

அருமை ஆகில்.
நண்பர் ஒருவரின் வலைப்பூவில் இருந்து பெறப்பட்டது என்பதை விட அவரின் முகவரியை சொல்வது நலம்.

திங்கள் சத்யா said...

ஆரம்பம் முதல் கடைசிவரை வாய்விட்டு, சத்தம்போட்டு ஆஃபீஸே அல்லோகலப்படும்படி சிரிக்கை வைத்திருக்கிறார் உங்கள் நண்பர். அவர் யார் என்பதை நீங்கள் சொல்லாமல் விட்டது மிகப்பெரிய தவறு. இடையிடையே கதைக்கேற்ற மாதிரி படங்களும் போட்டு, பார்ட்டி பின்னி எடுத்திருக்கிறார். இதுபோல் அவரைத் தொடர்ந்து எழுதச் சொல்லுங்கள். வாழ்த்துகள்!

vasu balaji said...

செம கலக்கல்.

Aaqil Muzammil said...

அவரது பெயர் ஆதவன்