Sunday, August 30, 2009

Earn More Money Online Now Get $6 instantly

Want to Earn some extra cash To your monthly income,Here is the story Recently One of my friend Refered me to a Survey site ,when i came across it and signed up for it And taken their first survey. I got $6 dollar credited to my account,however their minimum payout is $75 ,So I thought before i take any more of their surveys I first tell all the Bloggers in the blogosphere Who continously read my blog So That they can earn some money too Here Is the link Of the website $6.00 Welcome Survey After Free Registration! Thanks for reading my post. Hope you earn some money & do comment on my blog how much you earned from it.

மிக மோசமான நுட்பத் தயாரிப்புகள்

1. அமெரிக்கா ஆன்லைன் (1989-2006) 1989ல் ஒரு சாதாரண மடலாடற்குழுவாக தொடங்கப்பட்ட இது, கடும் சர்ச்சைக்குரிய விளம்பர உத்திகளால் பெரும் வெற்றி பெற்றாலும் உலகின் மாபெரும் இணைய சேவை வழங்கிக்கு இனிய அனுபவங்கள் இல்லை. ஆங்காங்கே இலவச வழங்கிகள் வந்துவிட்ட போதிலும் மோசமான வாடிக்கையாளர் சேவை, கட்டுக்கடங்கா எரிதம் போன்றவற்றால் தலைவலிக்குள்ளானது. சேவையை நிறுத்தச் சொன்ன பயனாளர்களை நிறுத்தாமல் மேன்மேலும் கட்டணம் வசூலித்த வழக்கில் 2005 ஆகஸ்டில் 1.25 மில்லியன் டாலர்கள் அபராதம் கட்டியது. 2. RealNetworks RealPlayer (1999) "இந்த ஒலிக்கோப்பை உங்களால் கேட்க முடியாது, இந்த கோடெக்கைத் தரவிறக்கம் செய்யுங்கள்..... மன்னிக்கவும் இந்தக் கோடெக் எங்களிடம் இல்லை" இது போன்ற பல செய்திகளை ரியல்பிளேயரில் பார்த்திருப்பீர்கள். ஒரு உளவு மென்பொருளைப் போல எரிச்சலூட்டும் (இன்றும் தொடரும்) விளம்பரங்கள், இவையெல்லாம் ஒரு சிறு துளி தான். ரியல் ப்ளேயரின் பெரும் அபாயம் (Terms & Conditions-ல் சொல்லாமலே) அது தரவிறக்கும் ஒவ்வொரு பயனருக்கும் தனி எண் அளித்து அதன் மூலம் அவரின் பொழுதுபோக்கை அறியும் தன்மை பலரைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எனினும் இது மைக்ரோசாஃப்டின் மீடியாப்ளேயருக்குச் சரியான போட்டி அளித்தது என்றால் மிகையில்லை. 3. Syncronys SoftRAM (1995) "உங்கள் கணினியில் மெமரி குறைவாக உள்ளதா? கவலை வேண்டாம். எங்களின் இந்த மென்பொருளை உபயோகித்தால் வேறெதுவும் செய்யாமலேயே உங்களுக்கு இருமடங்கு மெமரி கிடைக்கும்" என கவர்ச்சிகரமான விளம்பரத்தோடு வந்த மென்பொருள். இறுதியில் கணினியின் ஹார்ட்டிஸ்க் பேஜிங் அளவை அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவமானம், அபராதத்திற்கு உள்ளாகி இன்று ஒன்றுமில்லாமல் போனது. 4.Microsoft Windows Millennium (2000) இது யாருக்காவது நினைவில் இருக்கிறதா? மைக்ரோசாஃப்டின் இயங்கு தள வெளியீட்டிலேயே மிக மோசமான ஒன்று. Windows ME என்பதை Windows Mistake Edition என்றாலும் சரியே! ஆனாலும் பிற்காலத்தில் XP யில் பிரபலமான System Restore தத்துவம் இதில் தான் பிறந்தது. அதிலும் ஒரு சிக்கல். ஏதேனும் ஒரு கோப்பை வைரஸ் பாதித்து அதனை நீங்கள் கணினியிலிருந்து நீக்கியிருந்தால் அவையும் Restore செய்யப்படும், வைரஸ்களுடன்!!!! உண்மையில் Y2K என்றெல்லாம் மக்களைப் பூச்சாண்டி காட்டியது இந்த Millennium bug - ஐத் தானோ? 5.Sony BMG Music CDs (2005) கடையிலிருந்து இந்த இசைக் குறுந்தட்டுகள் வாங்கி உங்கள் கணினியில் இட்டு நீங்கள் பாடல் கேட்க நினைத்தால் உங்களுக்கு இசையால் மனம் இளைப்பாறுவதற்குப் பதில் இரத்த அழுத்தம் எகிறும். காரணம் இசையினால் அல்ல; இந்த Sony BMG Music CDs ஓர் உளவு மென்பொருளை உங்களிடம் கேட்காமலேயே நிறுவிவிடும். இதற்கு அவர்கள் சொன்ன காரணம், காப்புரிமையாம். கொஞ்சூண்டு Hacking அறிவு உள்ள சிறு விளையாட்டுப் பிள்ளை கூட உங்கள் கணினியைக் கைகடத்தல் செய்ய இயலும் இந்த மென்பொருள் உங்கள் கணினியில் உட்கார்ந்து விட்டால்.

new song of Black Eyed Peas Boom Boom Pow

“Boom Boom Pow”

“Boom Boom Pow”


Saturday, August 29, 2009

ஆச்சரியம் ஆனால் உண்மை ....

21 வாரம் மட்டுமே ஆனா குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் போது ஒரு கொடிய நோய்க்கு ஆளானது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம். அதுவும் தாயின் கர்பப்பையை வெளியே எடுத்து ஒரு சின்ன துளை இட்டு அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இத்தகைய அறுவை சிகிச்சையில் கைதேர்ந்த மருத்துவரான Joseph Bruner, இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். அந்த தாயின் கர்ப்பபையை வெளியே எடுத்து அறுவை சிகிச்சை செய்து முடிக்கும் தருவாயில் ஒரு மிக சிறிய கை ஒன்று அவரின் விரலை சிக்கென பற்றி கொண்டது ..ஆமாம் அது கர்ப்பபையில் இருத்த அந்த குழந்தையின் கை தான்.. ஒரு நொடி உறைந்து பொய் விட்டார் அந்த மருத்துவர் இந்த படத்தை தான் மேலே காண்கிரீர்கள்.. சிகிச்சை முடிந்து அந்த குழந்தையும் தாயும் நலமாக உள்ளனர். அந்த குழந்தையின் பெயர் Samuel Alexander Armas . google search பண்ணி பாருங்கள் மேலும் விபரம் அறிய..

டிக்கெட் வசூலில் ஒரே நாளில் ரூ. 95 லட்சம் குவித்த கந்தசாமி

சீயான் விக்ரமின் கந்தசாமி ரிலீஸுக்கு வரும் முன்பே ஒரு புதிய சாதனையைப் படைத்து விட்டது. டிக்கெட் முன்பதிவில் ஒரே நாளில் ரூ. 95 லட்சத்தை அள்ளியுள்ளதாம் கந்தசாமி. சீயான் விக்ரம், ஜில் ஜில் ஷ்ரியா நடிக்க, சுசி கணேசன் இயக்க, கலைப்புலி தாணு தயாரிக்க மிகப் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் கந்தசாமி. நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை உலகம் முழுக்க திரைக்கு வருகிறது கந்தசாமி. நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்ததாலும், பிரமாண்டமாக எடுக்கப்பட்டிருப்பதாலும், பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் கலக்கிக் கொண்டிருப்பதாலும், விக்ரமின் நான்கு வேடம், படம் முழுக்க அத்தனை பாடல்களையும் அவரே பாடியிருப்பது உள்ளிட்ட காரணங்களால் கந்தசாமிக்கு ஏக எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. மேலும், இதுவரை இல்லாத அளவாக 900 பிரிண்டுகள் இப்படத்துக்காக போடப்பட்டுள்ளதாம். தலைநகர் சென்னையில் மட்டும் 18 தியேட்டர்களில் போடவுள்ளனர். படத்துக்கான முன்பதிவு 16ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் மட்டும் 1, 46, 976 டிக்கெட்டுகள் விற்பனையானதாம். முதல் நாள் முன்பதிவு கலெக்ஷன் ரூ. 95 லட்சமாம். எந்தத் தமிழ்ப் படத்துக்கு இந்த அளவுக்கு இதுவரை வசூல் ஆனதில்லையாம். கலக்கு சாமி..!

தோனியை சந்திக்க கடையை விற்ற ரசிகர்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மஹேந்திர சிங் தோனியை சந்திக்க தனது கடையையே விற்றுள்ளார் ஒரு ரசிகர். உத்தரப் பிரதேச மாநிலம் சஹரங்பூரைச் சேர்ந்தவர் ரவீந்திரகுமார் சைனி (23). தோனியை சந்தித்து ரவீந்திர குமார் புகைப்படம் எடுத்துக்கொள்ளவேண்டும் என அவரது காதலி விரும்பியுள்ளார். அதற்காக தனது கடையை விற்று விட்டு தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் வந்து தங்கிவிட்டார் சைனி. ஒரு நாள் அல்ல, இரண்டு நாள் அல்ல, கடந்த 35 நாட்களாக தோனியை சந்திக்க பல வழிகளில் அவர் முயற்சி மேற்கொண்டுள்ளார். அந்த பொன்னான நேரம் அவருக்கு கடந்த புதன்கிழமை அமைந்தது. மும்பை செல்வதற்காக ராஞ்சி விமான நிலையத்துக்கு தோனி வந்துள்ளார். அந்த நேரத்தில் பாதுகாப்பு வீரர்களின் கெடுபிடி குறைவாக இருந்ததால் தோனியுடன் சைனி கை குலுக்கினார். அங்கிருந்த புகைப்படக் கலைஞர்கள் உடனடியாக கிளிக் செய்தனர். சைனிக்கு அந்த புகைப்படத்தை தருவதாகவும் உறுதி அளித்தனர். ராஞ்சியில் சைனி நீண்ட நாட்களாகத் தங்கியிருப்பது தெரிய வந்தது. தோனியை சந்திக்க என்னைத் தொடர்பு கொண்டார். தற்போது அவரது கனவு நனவாகியுள்ளது என தோனியின் நண்பர் அனிமேஷ் குமார் என்பவர் தெரிவித்தார்.

அழகாக இருக்க!- 12 வழிகள்!

1.யாருடனும் ஒப்பிடாதீர்கள். நீங்கள் தனித்தன்மையானவர் என்பது உண்மை. ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்கள். ஒவ்வொருவர்களுக்கும் கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை, பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் ஒப்பிட்டுப் பார்ப்பதால் எந்தப்பயனும் இல்லை.

2.உங்கள் பழக்க வழக்கங்களை உயர்த்தி மெருகேற்றுங்கள். அன்பாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அன்பால் உங்கள் முகம் பிரகாசம் அடையும். அன்பே உங்கள் முகத்துக்கு அழகைத்தரும்.

3.உங்களைச் சுற்றி வசீகர அலைகளைப் பரப்பவேண்டுமா? சிரியுங்கள். உங்கள் நண்பர்களுடன் இருக்கும்போது உங்கள் சிரித்த முகம் அவர்களை உங்கள்பக்கம் திருப்பும். உங்கள் மன அழகு உங்கள் உடல் அழகை விஞ்சும். உங்களை வசீகரமானவர்களாக மாற்றும்.

4.உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளுங்கள். உடல் சுகாதாரமாக இருந்தால்தான் உற்சாகமாக இருக்கமுடியும். உடலில் பொங்கும் வலிமையும், சக்தியும் உங்களை சோர்வில்லாமல் இருக்க வைக்கும். சோர்வில்லாமல் உற்சாகமாக இருக்கும் உங்களை எல்லோருக்கும் பிடிக்கும்.

5.உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் குழுவிலிருந்து உங்களைத் தனித்துக் காட்டும். பாட்டு, டான்ஸ் போன்றவற்றில் இருப்பவர்கள் ஈர்ப்பின் மையமாக இருப்பதைப் பார்க்கிறோம். முகம் அழகானவர்களை விட திறமைசாலிகள் கொடிகட்டிப்பற்ப்பதை நாம் காண்கிறோமல்லவா!

6.உங்களிடம் இருக்கும் திறமைகளை வளர்த்துக்கொண்டீர்கள். அது உங்களைச் சுற்றியுள்ளோருக்குத் தெரியவேண்டுமே!! கல்லூரியில் நுழையும் முதல் வருடத்திலேயே திறமையை வெளிப்படுத்துபவர்களைச் சுற்றி ஒரு நட்புக்குழுவே உருவாகுவதை எல்லோரும் கண்டிருப்போம். திறமைகளைப் பூட்டி வைக்க வேண்டாம். உங்கள் அறிவு, திறமை ஆகியவற்றை உலக அழகிப்போட்டியில் கூட சோதிப்பதைக் கண்டிருப்பீர்கள்!

7.நோகடிக்கும், பிறரைக் குறை சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். எல்லோரிடமும் குறையிருக்கும். இதைப் பெரிது படுத்தாதீர்கள். பெருந்தமையாக பாராட்டிப் பேசும் உள்ளத்தை எல்லோருக்கும் பிடிக்குமே!!

8.உன்னால் முடியாது என்று சொல்லும் நபர்களைக் கண்டுகொள்ளாதீர்கள். திறம்பட செய்யமுடியும் என்ற நம்பிக்கை எண்ணமே உங்களைத் தனித்தன்மையுடன் காட்டும்.

9.உங்கள் உள்ளேயே ஒரு குரல் அவநம்பிக்கையை ஏற்படுத்தும். ஒவ்வொரு சிறந்த செயல்பாட்டையும் அது தடுத்துவிடும். தள்ளிப்போடும். முடங்கிப்போய் இருப்பவர்கள் அழகாகக் காட்சியளிக்க முடியாது.

10.பொறாமையை விட்டுத்தள்ளுங்கள். பிறருடைய திறமை, பணம், புகழ் ஆகியவற்றைப் பார்த்துப் பொறாமைப் படுவதைவிட உங்கள் வாழ்வை, செயல்களைத் திருப்திகரமாகச் செய்து பாருங்கள். உங்கள் உள்ளத்திருப்தி உங்கள் முகப் பொலிவைக் கூட்டிவிடும்.

11.உங்களுக்கே உங்களைப் பிடிக்காமல் இருக்கலாம். உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத பட்டியல் நிறைய இருக்கும். அதையெல்லாம் புறந்தள்ளுங்கள். உங்கள் முக அமைப்பையோ, நிறத்தை,உயரத்தைப் பற்றியெல்லாம் படும் கவலைகளை விட்டொழியுங்கள். உங்களை நீங்கள் விரும்புவதே உங்களை அழகாக்கும்.

12.குறைந்த அளவான மேக்கப், பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், நகங்கள், பாதங்களை சீராக வைத்துக்கொள்ளுதல், உடையில் கவனமாக இருத்தல், உடலில் மெல்லிய நல்ல நறுமணம் வீசும் வண்ணம் இருத்தல் ஆகியவை பொதுவாக அழகு சேர்க்கும் என்பது உங்களுக்கே தெரியும்.

Friday, August 28, 2009

கிரிக்கெட் வசைபாடிகள் part 2 (18+) மட்டும்

கிரிக்கெட்டில் இப்போதெல்லாம் வசைபாடுதல் (Sledging) கிட்டத்தட்ட ஒரு நாகரிகமான செயலாகவே மாறிவிட்டது. இப்படியான வசைபாடுதல்கள் சில வேளைகளில் வரம்பு மீறியதாகவும், சில வேளைகளில் மிகவும் நகைச்சுவையாகவும் அமைந்து விடுவதும் உண்டு. அப்படிப்பட்ட சில சம்பவங்களை இங்கே தொகுத்திருக்கிறேன்:
ரவி சாஸ்திரி- மைக் விட்னி (Ravi Shastri- Mike Whitney)
இந்தியர்கள் (இப்போதைய அணியை விடுங்கள்) பெரியளவில் வசைபாடுவது இல்லை. ஆஸ்திரேலியர்கள் அதை முகழுநேரத் தொழிலாகக் கொண்டவர்கள். 1991/92 ஆஸ்திரேலிய பயணத்தில் சிட்னியில் ஒரு டெஸ்ட் போட்டி. ஷேன் வார்னின் முதல் டெஸ்ட் போட்டி. ஏற்கனவே 5 டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளிலும் இந்தியா தோற்றிருந்தது. காயமுற்ற ஒரு வீரருக்காக களத்தில் மிட்-ஆனில் களத்தடுப்பில் இருந்த விட்னியை நோக்கி பந்தை அடித்த சாஸ்திரி ரண் எடுப்பதுபோல் பாவ்லா காட்ட, பந்தை எடுத்த விட்னி சொன்னார், 'கிரீஸை விட்டு வெளிய வந்தே, மவனே உன் தலையை உடைச்சுடுவேன்' என்று. சாஸ்திரி அடுத்த நொடி அழகாகச் சொன்னார் ‘நீ பேசற அளவுக்கு விளையாடத் தெரிஞ்சிருந்தா இப்படி சப்ஸ்டிடியூடாகவா ஃபீல்ட் பண்ணுவே. போப்பா போ, முதலில் சரியா விளையாடக் கத்துக்கோ'. சாஸ்திரி அந்தப் போட்டியில் 206 ரன் அடித்தார். ஆஸியின் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கட் வேறு எடுத்து கிட்டத்தட்ட இந்தியாவை ஜெயிக்கவைத்தார். சச்சினுக்கும் சிட்னி கிரிக்கட் மைதானத்துக்குமான காதல் கதை அவர் அடித்த 148* உடன் ஆரம்பமானது.
இயன் ஹீலி- கட்டையான, குள்ளமான ஆட்டக்காரர் (Ian Healy and A Short Chubby Batsman)
ஆஸி அணி தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, புகழ் பெற்ற ஹான்ஸி குரொஞ்சேயின் (Hansie Cronje) ஃப்ரீ ஸ்டேட் (Free State) மாநிலத்துக்கு எதிராக ஒரு பயிற்சி ஆட்டம் ஆடினார்கள். ஹான்ஸியின் அணியில் ஒரு கட்டையான குண்டான பேட்ஸ்மன் ஒருவருக்கு ஷேன் வார்ன் பந்து வீசிக்கொண்டிருந்தார். விக்கட்-கீப்பர் ஹீலி வார்னிடம் நகைச்சுவையாக ‘ ஷேன், பிட்சின் அரைவாசியில் ஒரு மார்ஸ் சாக்லெட் பாரைப் போடு. இந்தக் குண்டன் அதை எடுக்க வெளியே வருவான் அப்போ இவனை ஸ்டம்ப் பண்ணிடறேன்' என்றார். அந்த பேட்ஸ்மான் சிரித்து விட்டு, ஷார்ட் லெக்கில் களத்தடுப்பில் இடுபட்டிருந்த டேவிட் பூனைப் (David Boon) பார்த்துச் சொன்னார், ‘இல்லை இல்லை, நம்ப பூனி (டேவிட் எனக்கு முன்னமே அதை எடுத்துடுவான்'. டேவிட் பூனின் தோற்றம், அவரது நடை, உடை பாவனை தெரிந்தவரானால் இந்தக் கடியிலுள்ள ஆழம் புரியும் உங்களுக்கு.
மேர்வ் ஹ்யூஸ்- ஹான்ஸி குரோஞ்சே (Merv Hughes- Hansie Cronjea)
மேலே ஹீலி கடி வாங்கிய அதே மேட்ச். ஹான்ஸி அபாரமாக ஆடிக் கொண்டிருந்தார். அநேக பந்துகள் பவுண்டரி லைனுக்குப் பறந்து கொண்டிக்க, அப்போட்டியில் ஆலம் பார்டருக்கு (Alan Border) பதிலாக தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்த மார்க் டெய்லர் (Mark Taylor) ஹ்யூஸை பந்து வீச அழைத்தார். அவரையும் ஹான்ஸி விட்டு வைக்கவில்லை. கிரிக்கட் காமெடிகளில் அல்டிமேட் ஸ்டாரான ஹ்யூஸ் சும்மா விடுவாரா. ஒரு பந்தை ஹான்ஸி அடித்ததும் விறு விறுவென நடந்து பேட்ஸ்மனிடம் போனார். 'நீ சரியான ஆளுன்னா இத பவுண்டரிக்கு அடியேன் பாக்கலாம்' என்று ஹான்ஸிக்கு தன் பின்புறத்தைக் காட்டியபடி ‘பர்ர்ர்ர்ர்ர்' என்று பெரிதாகக் காற்றை வெளியேற்றிவிட்டுத் திரும்பினாராம் ஹ்யூஸ். ஆஸிவீரர்கள், ஹான்ஸி, அம்பயர்கள் என்று எல்லோரும் சிரித்து முடிக்கவே ஐந்து நிமிடம் ஆயிற்றாம்.
ஃப்ரெட் ட்ரூமன் - கேரத் மக்கின்ஸி (Fred Trueman- Garath Mackenzie)
ஃப்ரெட் ட்ரூமன் இங்கிலாந்தின் கிரிக்கெட் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய பெயர். ஏனென்றால் டெஸ்ட் கிரிக்கட் வரலாற்றிலேயே முதன் முதலாக முன்னூறு விக்கட்டுக்களைக் கைப்பற்றிய வீரர் இவர்தான் (எல்லா நாட்டு வீரர்கள் மத்தியிலும்). இப்படிப்பட்ட ட்ரூமன் ஆஸ்திரேலியாக்கு எதிரான ஒரு போட்டியில் பவுண்டரி லைனில் களத்தடுப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவர் நின்ற இடத்தின் அருகே பெவலியனில் இருந்து களத்துள் நுழையும் வாசல் இருந்தது. அப்போது ஒரு ஆஸி விக்கட் வீழ்ந்தது, இங்கிலாந்து வீரர்கள் ஒருவரை ஒருவர் தட்டிக்கொடுத்துவிட்டு தத்தம் களநிலைகளுக்கு மீண்டனர், ட்ரூமன் உட்பட. அப்போது உள்ளே வந்து கொண்டிருந்த ஆஸி ஆட்டக்காரர் மக்கின்ஸி பெவலியன்-மைதானம் இடைப்பட்ட கதவை மூட முயன்று கொண்டிருந்தார். ட்ரூமன் அவரருகே போய் ‘அப்பனே, என்ன செய்கிறாய்?' என்றிருக்கிறார். மக்கின்ஸி 'கதவை மூட முயல்கிறேன்' என்று சொல்ல, ட்ரூமன் சொன்னாராம். ‘இப்போ போன வேகத்திலே திரும்பப் போகிறாய். உள்ளே போவதுக்கு வசதியாக கதவைத் திறந்துவிட்டுத்தான் போயேன்'. அடுத்த ஓவரை ட்ரூமனே வீசவேண்டியிருந்தது. ஏற்கனவே கடுப்பை எல்லாம் அடக்கி மூன்று பந்துகளைத் தடுத்த மக்கின்ஸிக்கு ட்ரூமனைக் கண்டதும் பொறுக்காமல் விசிறினார்... போல்ட் (Bowled) ஆகி திரும்பினார்.
மேலும் சில சுவையான வசைகளோடு இன்னொரு பதிவில் சந்திப்போமா?

வேட்டைக்காரன் : விஜய்யின் அறிமுக காட்சி...!!

வேட்டைக்காரன் விஜய் introduction சீன் வெளிவந்தது விட்டது - no fake, only ஒரிஜினல்

எனது நண்பன் தந்த தகவல்

Earn money via internet

this is the site where you can earn online money. 1st they will give you 6 to 8 projects. if you finished it they will pay $500 per month. end of the month if you are good worker you'll get $135,000 money what are you waiting for sign up now
join
Click this link

கந்தசாமி!

ஏழைங்கன்னாலே நம்ம தமிழ்சினிமா காரங்களுக்கு ரொம்ப பிரியம். எப்படியாவது அவங்க கண்ணீர தொடச்சி அவங்க வாழ்க்கைல ஒரு டார்ச் லைட்டையாவது அடிக்கோணும்னு ரெம்ப காலமா கஷ்டப்பட்டுகிட்டு இருக்காங்க. அறுபது வருஷத்துக்கு மொன்னால வந்த மலைகள்ளன்ல தொடங்கி ரெண்டு வருஷம் முன்னால வந்த சிவாஜி வரைக்கும் ஏழைங்க ஏன் ஏழைங்களா இருக்காங்கனு சொல்லிட்டே இருக்காங்க. இந்த ஏழைங்களுக்கு பிலிம் காட்டியே பல சினிமாக்காரங்க பணக்காரங்க ஆகிருக்காங்க. அந்த வரிசைல நேத்தும் ஒரு படம் ரிலீஸாகிருக்கு. கந்தசாமி. கறுப்பு பணத்தையெல்லாம் கொண்டு போய் வெளிநாட்டுல பதுக்கி வக்கிறாங்க அதான் இந்தியா ஏழை நாடா இருக்கு. அதெயல்லாம் இங்க கொண்டு வந்துட்டா போதும் எல்லாஞ்சரியாகிடுமாம். பணக்காரங்க கிட்ட இருக்கற காசெல்லாம் ஏழைக்கு கிடைச்சிட்டா போதும் நாட்டுல எல்லாரும் சமம்தானு தாணு பல நூறு கோடி செலவளிச்சு சொல்லிருக்காரு. பாவம் தாணு பரம ஏழை போலருக்கு. ச்சே என்னே உயர்ந்த உள்ளம். ஏழைங்க மேல என்னே பரிவு.. ச்ச்ச்சுச்சுசுசுசு.. ஒரே இஸ்கூல்ல படிச்ச பயலுவ வேற வேற அரசாங்க உத்தியோகத்தில இருந்துகிட்டு அது மூலமா நாட்டையே ஆட்டிப்படைக்கிற பெரிய பணக்காரங்க... ஓகே ஓகே கூல் நீங்க ரமணானு மனசுக்குள்ள நினைக்கிற எனக்கு கேக்குது. அதேதான். அந்த பணக்காரங்க கிட்டருந்து எடுத்த காச ஏழை மக்களுக்கு குடுக்கறாரு. அதுக்கு டெக்னிக் என்னானா போருர் முருகன் கோயில் மரத்துல உங்க கொறைய எழுதி போட்டா போதும். கந்தசாமி உங்க பிரச்சனைய சோல்வ்,... ஓகே ஓகே கூல் இது அந்நியன் மாதிரி இருக்கா.. அதான் இல்ல ஏன்னா அதுல வெப்சைட்ல போடுவாங்க இதுல கைல எழுதி மரத்துல கட்டுவாங்க டிபரன்ஸ் புரியுதா! அப்புறம் ஸ்பைடர்மான்,பேட்மான் அதாங்க சிலந்தி மனிதன் , வௌவால் மனிதன் மாதிரி இவரு ஒரு சேவல்மான் (COCK-MAN ). இங்கிலீசுல சொன்னா அமெரிக்காகாரன் சிரிப்பான். விக்ரம் சேவலாட்டமே கொக்கரக்கோனு நல்லா காமெடியா பண்றாரு.. லேடீஸ் கெட்டப்ல வந்து டேன்ஸ்லாம் ஆடறாரு. நடிக்கதான் அவ்ளோவா வாய்ப்பில்ல. சும்மா விக்ரம் நிறைய உழைச்சாருனா என்னத்தா உழைச்சாருனுதான் தெரியல. ஒரு வேள நாலு வருஷம் ஒரு படத்தில நடிக்கறதுக்கு பேரு உழைப்பாருக்கும் போல. சுரேயானு ஒரு பொம்மனாட்டி. நல்லா படம் பூரா பாப் கட்டிங் பண்ணிகிட்டு நெஞ்சு இடுப்பு வயிறு தொப்புள்னு ஏழைகளுக்கு ஹெல்ப் பண்றாங்க. சாரி ஏழைகளுக்கு ஹெல்ப் பண்ற விக்ரம லவ் பண்றாங்க. ஆனா பாவம் அவங்களயும் அவங்க குரலையும் சிங்க் பண்ணா ஏதோ பிளஸ்டூ பையன கூட்டியாந்து லேடிஸ் வேசம் போட்டு நடிக்க வச்ச மாதிரி இருக்கு. சுசி கணேசன் சின்னதா ஒரு பாத்திரத்தில வராரு. சின்ன பாத்திரம்னா கிண்ணம் , ஸ்பூன் , டம்ளர் மாதிரி. பாவம்! வடிவேலு எப்பவும் போல நல்லா அடிவாங்குறாரு. பாவமா இருக்கு. அவரோட இயக்கம்? அவருக்கு படம் எடுக்கவரலைனு எவன் சொன்னான். அவருக்கு படம் எடுக்க வரும் ஆனா வராது. பாவம்ங்க கொஞ்சம் ஓவரா படம் எடுத்துட்டாரு. மொக்கையா ஒரு கதை , அதுக்கு பல கோடி ரூவா பட்ஜெட்டு. மனசுக்குள்ள ஷங்கருனு...!. அதுக்காக ஷங்கர் படத்தோட கதையவேவா படமா எடுக்கணும். சுசி கணேசன் பாவம். படம் பூரா கேமரா நம்ம முகத்தில பிளாஷ் அடிச்சுகிட்டே கிடக்குற எஃபெக்ட்டு. எடிட்டிங்னு ஒரேடியா ஒரு ஒரு சீனையும் ஓவரா எடிட்டிடாடய்ங்க போல. ஆனாலும் பின்னாடி சீட்டு ஆயாவுக்கு கண்ணு அவிஞ்சி போற அளவுக்கா. பாவம்யா மக்க பொழச்சு போகட்டும் விட்டுருங்க! படம் பூரா செம மியூஜிக். தேவி சிரி பிரசாத் நல்லா பண்ணிருக்காப்ல. ஆனா வேற படத்துக்கு இப்படி பண்ணிருக்கலாம். இந்த படத்துல இது ஓட்டல. போனவாரம் உலகப்படம் பார்த்து கெட்டுப்போன ஒருத்தர் படம் பாத்து நொந்தேன். இந்தவாரம் ஹாலிவுட் படம் பார்த்து கெட்டுப்போன ஒருத்தர் படம் பார்த்து... ம்ம் விதி வலியது. படம் பார்த்துட்டு வெளிய வரும்போது கேர்ள்பிரண்டு திட்டிகிட்டே வந்துச்சு. ஏன்மா இப்படி திட்ற பாவம் எவ்ளோ காசு செலவழிச்சு கஷ்டப்பட்டு உழைச்சு படம் எடுத்துருக்காய்ங்கனு சொன்னேன். உழைச்சிட்டா போதுமானு கேட்டா..! ஐயாம் கப்சிப். இதே ரேஞ்சுல இன்னும் மூணே படம். தமிழ்சினிமாவ ஆண்டவானலயும் காப்பத்த முடியாது. அம்புட்டுதான். கந்தசாமி - ஹிஹி.. பாவம் தாணு! பின் குறிப்பு - மத்தபடி கலைப்புலி தாணுவுக்கு எங்கருந்துதான் இவ்ளோ பணம் வருதோ தெரியல. எவ்ளோ அடி வாங்குனாலும் தாங்குறாரு. ஏற்கனவே பல பேருகிட்ட வாங்கியும் புத்தியில்லாத மனுசன். ரொம்ப்ப்ப்ப்ப நல்லவரு போல.. ம்ம்..

Thursday, August 27, 2009

சோனியா முன்னிலையில் காங்கிரஸில் சேருகிறார் விஜய்!

சென்னை: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் ராகுல் காந்தி ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேருகிறார் நடிகர் விஜய். இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் இது காங்கிரஸ் மற்றும் விஜய் இருவருக்கும் பலம் சேர்ப்பதாக அமையும் என்றும் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் சமீபத்தில்தான் மக்கள் இயக்கம் என்ற அமைப்பைத் தொடங்கினார். இந்த இயக்கம் சார்பில் தமிழகம் முழுக்க கம்ப்யூட்டர் கல்வி மையங்கள், இலவச திருமண மண்டபங்கள் என தனது நெட்வொர்க்கை பலப்படுத்தி வருகிறார். மேலும் ஒரு அரசியல் கட்சிக்கே இல்லாத அளவு ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் சொந்த கட்டடங்களை ஏற்படுத்தி அதில் மக்கள் இயக்கத்தை இயங்க வைக்கும் முயற்சியில் உள்ளார். இந்த கட்டடங்கள் ஒரு பக்கம் திருமணக் கூடங்களாகவும், இன்னொரு பக்கம் அவரது மக்கள் இயக்க அலுவலகங்களாகவும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் இந்த நெட்வொர்க்கை அப்படியே காங்கிரஸ் கட்சிக்கு, அதுவும் அவர் ஒரு கட்சியின் தலைவராக மாறும் முன்னரே இழுத்துப் போட்டுவிட வேண்டும் என விரும்பிய ராகுல் காந்தி, டெல்லிக்கு வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடந்தது என விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரன் கூறியுள்ளார். அதாவது தன்னை இளைஞர் காங்கிரஸ் தலைவராக நியமிக்க வேண்டும் என விஜய் கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு ராகுல் காந்தியும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தனிக்கட்சி தொடங்கிய விஜய்காந்த், சரத்குமார் எல்லோருமே இன்றைக்கு முழு வெற்றி பெற முடியாமல் ததிங்கினதோம் போடுவதால், வேண்டாம் விஷப்பரீட்சை என்ற தனது நலம் விரும்பிகளின் ஆலோசனையின் பேரிலேயே இந்த முடிவுக்கு வந்துள்ளாராம் விஜய். மேலும் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளில், காங்கிரசில் மட்டுமே நடிகர்கள் யாரும் இல்லை என்பதால், அதில் இணைய அவர் முடிவெடுத்துள்ளாராம். ராகுல் காந்தியிடம் தனது விருப்பத்தைச் சொன்ன விஜய், விரைவில் சோனியா காந்தி முன்னிலையில் முறைப்படி காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளாராம். இதுகுறித்து விஜய் தரப்பில் விசாரித்த போது, இன்னும் சில தினங்கள் பொறுத்திருந்து பாருங்கள் என்பதே பதிலாக வந்தது.

பதில் சொல்லுங்க சார் பதில் சொல்லுங்க!

சும்மா பொழுது போகலை. அதுதான் சும்மா நாம எங்கியோ வாசிச்ச நாலு கேள்விகளை கேட்டுவைப்போம்னு பார்க்கிறேன். இதெல்லாம் ஜுஜுபி.... அதனால.. சும்மா ட்ரை பண்ணுங்களேன்!
  • ஒரு ஆள். காரில 5000 மைல் பயணம் செய்யவேண்டி வந்துச்சு. அவர்கிட்ட ஒரு புத்தம்புது ஸ்டெப்னி டயர் வேற இருந்துச்சு. காரோட நாலு டயர் + ஸ்டெப்னின்னு ஐந்து டயரையும் மாத்தி மாத்திப் பாவிச்சு 5000 மைல் தூரம் பயணித்தார். பயணமுடிவில் எல்லா டயர்களும் ஒரேயளவு தூரம் ஓடறதுக்கு பாவிக்கப்பட்டிருந்தது என்றால், ஒரு டயர் எத்தனை மைல் ஓடறதுக்கு பாவிக்கப்பட்டது?
  • நாலு பசங்க நாலு பொண்ணுங்களோட ஒரு ஆளில்லாத் தீவுக்கு போனாங்க. போன இடத்தில எல்லோருக்கும் காதல் தீ பத்திக்கிறது. ஒருத்தன் யாராவது ஒரு பொண்ணை காதலிக்கிற அதேவேளை, யாராவது ஒரு பொண்ணால் காதலிக்கவும் படுகிறான். நம்ம விஷால் ஒரு பொண்ணை காதலிக்கிறான். அவளோ விஜய்யை நேசிக்கிறா. சிம்பு காதலிக்கிற பொண்ணு அசினைக் காதலிக்கிற பையனை நேசிக்கிறா. த்ரிஷாவை காதலிக்கிற பையனை, நேசிக்கிற பொண்ணை நம்ம பிரபுதேவா காதலிக்கிறான். நயன்தாராவுக்கு பிரபுதேவாவை பிடிக்கவே இல்லை. அதே சமயம் நமீதா காதலிக்கிற பையன் நயன்தாராவைக் கண்டாலே கடுப்பாகிறான். அப்பிடீன்னா, சிம்புவை யார் காதலிக்கிறார்?
  • ஒரு அரேபிய ஷேக். ரொம்ப வயசாகி மரணப் படுக்கையில இருக்கார். அவருக்கு இரண்டு மகன்கள். ஆனாத் தன்னோட சொத்த பிரிக்க விரும்பல. அதனால மகன்களுக்கு ஒரு ஒட்டக ஒட்டப் போட்டி வைத்தார். 'எவனது ஒட்டகம் கடைசியாக வெற்றிக்கோட்டைக் கடக்கிறதோ அவனுக்கே என் சொத்து' என்றார். இவர்களும் கோட்டை முதலில் தன் ஒட்டகம் தொடாமலிருக்க எங்கோ எல்லாம் அலைந்தார்கள். இருவருமே கோட்டை நோக்கிப் போகவில்லை. பிரச்சினை முடிவதாயில்லை. அதனால் நம்மள போல ஒரு அறிவாளிகிட்ட பிரச்சினைக்கு ஒரு தீர்வு கேட்டாங்க. நீங்க என்ன சொன்னாலும் செய்யறோம், ஆனா இதுக்கு விரைவில முடிவுகட்டுங்கன்னு கேட்டாங்க. அவரும் ஒரு ஐடியா சொன்னார். மறுகணமே இரண்டு பேரும் ஆளுக்கொரு ஒட்டகத்தில் ஏறி வெற்றிக் கோட்டை நோக்கிப் பறந்தாங்க. அவர் அப்படி என்ன சொன்னார்?
  • ஒரு குடியானவன். அவங்கிட்ட 10 ஆடு, 8 கழுதை, 2 மாடு எல்லாம் இருந்திச்சு. அவன் கொஞ்சமே கொஞ்சம் மூளை கழன்றவன். அதனால மாடுகளை கழுதைன்னு சொல்லுறான். ஆக, அவங்கிட்ட எத்தனை கழுதை இருக்கு?
  • ஒரு சிம்பிளான குடும்ப ஒன்றுகூடல். அங்கே ஒரு தாத்தா, ஒரு பாட்டி, இரண்டு அப்பாக்கள், இரண்டு அம்மாக்கள், நான்கு பிள்ளைகள் (Children not Kids), மூன்று பேரப்பிள்ளைகள், ஒரு சகோதரன், இரண்டு சகோதரிகள், இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள், ஒரு மாமியார், ஒரு மாமனார், ஒரு மருமகள் ஆகியோர் கூடியிருந்தனர். மேலேயுள்ள எண்ணிக்கை எல்லாவற்றையும் கூட்ட 23 பேர் வரவேண்டும். ஆனால் அங்கே அதைவிட மிகக்குறைவான எண்ணிக்கையிலான ஆட்களே இருந்தார்கள் எனில், அந்த ஒன்றுகூடலில் கலந்துகொண்டவர்கள் எத்தனை பேர்?
ஐந்து கேள்விக்கும் பதில் சொல்லணும்... பதில்களுக்கு கொஞ்சமாச்சும் வெயிட் பண்ணணும். ஆரம்பிக்கட்டும் அமைச்சரே ஆட்டம்... ஹா!

விஜய் ஹைக்கூ

பதிவர் கிருதிகன் அவர்கள் எழுதிய நடிகர் விஜய் பற்றிய சில ஹைக்கூக்களை தொகுத்திருந்தார். பிடித்திருந்தது. பகிர்ந்து கொள்கிறேன் (இவை ஏற்கனவே சிலவேளை பிரபலமடைந்திருக்கலாம்).
பெப்சி விற்பனையில் திடீர் ஏற்றம் - கொக்கோ கோலா விளம்பரத்தில் அவன் ... ****
"என் மகன் ஆதரவு
யாருக்கும் இல்லை" - தந்தை பேச்சு.. அனைத்து கட்சிகளும் விட்டது பெருமூச்சு..
****
பறவைகளை சுடுபவன் வேட்டைக்காரன்.. படக்கதைகளை சுடுபவன் ??? ****
மருத்துவ மாணவர்கள் சேர்க்கை குறைந்தது - அவனுக்கு டாக்டர் பட்டம்!! ****
காதலிக்கு சோப்பு போடுபவன் காதலன்.. அவள் அம்மாவுக்கும் சோப்பு போடுபவன் ???? ****
சங்கம் வைத்து தமிழ் வளர்த்தான் அன்றைய தமிழன் சங்கவியை வைத்து தன்னை வளர்த்தான் இன்றைய 'தமிழன்' *****
டாக்டர், டாக்டரேட் (வைத்தியன், காலாநிதி) வித்தியாசம் பிடிபடாமல் எழுதப்பட்டதால் நான்காவது கவிதை கொஞ்சம் உதைக்கிறது. இருந்தும் நல்ல கடி.
படம் எல்லாம் ‘கூகிள்' உபயத்தில் நான் போட்டது. ஸ்ரீவித்யாவுக்கு இவர் சோப் போடுற படம் மட்டும் கிடைக்கவில்லை.
பி.கு: இது தலைவலிகளுக்கெல்லாம் தலைவலி... தளபதிகளுக்கெல்லாம் தளபதி பெரிய தலைவலி... சாரி, இளைய தளபதி விஜய் அவர்களையோ, அவரது ரசிகப் பெருமக்களையோ (என்னா ரசனைய்யா அவங்களுக்கு) தாக்குவதற்காகப் போடப்பட்ட பதிவல்ல எனத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்

கிரிக்கெட் வசைபாடிகள் (18+) மட்டும்

கிரிக்கெட்டில் இப்போதெல்லாம் வசைபாடுதல் (Sledging) கிட்டத்தட்ட ஒரு நாகரிகமான செயலாகவே மாறிவிட்டது. இப்படியான வசைபாடுதல்கள் சில வேளைகளில் வரம்பு மீறியதாகவும், சில வேளைகளில் மிகவும் நகைச்சுவையாகவும் அமைந்து விடுவதும் உண்டு. அப்படிப்பட்ட சில சம்பவங்களை இங்கே தொகுத்திருக்கிறேன்:
அப்துல் காதர் எதிர் கட்டையான சின்னப் பையன் (Abdul Quadir)
பாகிஸ்தானின் புகழ் பெற்ற லெக்-ஸ்பின் பந்துவீச்சாளரான அப்துல் காதிர் அன்றைக்கு கொஞ்சம் அதிகமாகவே கடுப்பாகியிருந்தார். அவருக்கு அடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட்டில் புகழ் பெற்று விளங்குவார் என்று எதிர்பார்க்கப் பட்ட முஷ்தாக் அகமது ஒரு ஓவரில், இந்தியாவைச் சேர்ந்த ஒரு பால்குடிப் பையன் முஷ்தாக்கை இரண்டு முறை சிக்ஸருக்கு அடித்தான். அது ஒரு கண்காட்சி ஆட்டம் என்றாலும் காதிர் அதைக் கொஞ்சம் சீரியஸாகவே எடுத்து ஆடிக்கொண்டிருந்தார். முஷ்தாக்கின்பால் அந்தச் சின்னப் பையன் காட்டிய அலட்சியத்தைக் கண்ட காதிர் அவனிடம் போய், ‘ஏய், நீ சின்னப் பையன்களை ஏன் அடித்து நொருக்குகிறாய்? முடிந்தால் எந்து பந்துகளை அடி பார்க்கலாம்' என்றார். காதிரின் அந்த வேண்டுகோளை அந்தப் பால்குடிப் பையன் சிரமேற் கொண்டு நிறைவேற்றி வைத்தான்.. காதிரின் அந்த ஓவரின் 6 பந்துகளில் பெறப்பட்ட ஓட்டங்கள் வருமாறு.. 6,0,4,6,6,6. அந்தத் தொடரிலேயே அந்தப் பால்குடிக்கு இந்தியாவுக்கு விளையாடும் வாய்ப்புக் கிடைத்தது. பெரிதாக எதையும் அந்தத் தொடரில் சாதிக்காவிட்டாலும், 1989 இல் 16 வயது நிரம்பிய அந்தப் பையனின் இன்றைய சாதனைகள் மலைக்க வைப்பன. அந்தப் பையன் சச்சின் என்று நான் சொல்லவும் வேண்டுமா?
மார்க் வோ எதிர் அடம் பரோரே (Mark Waugh vs Adam Parore)
நியூசிலாந்து விக்கெட் காப்பாளரான பரோரே அவுஸ்திரேலியாவுக்கு எதிராக துடுப்பெடுத்தாடக் களம் இறங்கினார். ஸ்லிப்பில் நின்ற மார்க் வோ அவரைப் பார்த்து ‘அட, உன்னை எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. இரண்டு வருஷத்துக்கு முன்னர் உன்னை அவுஸ்திரேலியாவில எப்படி பார்த்தேனோ, அப்படியே இருக்கிறாய். கொஞ்சம் கூட முன்னேறவேயில்லை' என்றார். பரோரே சொன்னார், ‘நான் முன்னேறவில்லை, அதை ஒத்துக் கொள்ளுறேன். ஆனால், நீ ரொம்பவே முன்னேறிவிட்டாய். இரண்டு வருஷத்துக்கு முன் ஒரு கிழவியைக் காதலித்துக் கொண்டிருந்தாய். இப்போது அவளை விட கிழவியான ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டு விட்டாயாம் என்று கேள்விப்பட்டேன்'. மார்க் வோ கப்சிப்.
சேர். இயன் பொதம் எதிர் ரொட்னி மார்ஷ் (Sir. Ian Botham vs Rodney Marsh)
உலகப் புகழ் பெற்ற இருவரின் உலகப் புகழ பெற்ற மோதல் இது. ஆஷஸ் தொடரில் துடுப்பெடுத்தாட பொதம் களமிறங்கியபோது, அப்போதைய அவுஸ்திரேலிய விக்கட் காப்பாளரான மார்ஷ் அவரைப் பார்த்துக் கேட்டார், ‘இயன், உன்னுடைய மனைவியும் என்னுடைய குழந்தைகளும் நலமா நண்பனே' என்று. பொதம் சிரித்துவிட்டுப் பதில் சொன்னார், 'என்னுடைய மனைவி என்றைக்குமே நலம். உன்னுடைய குழந்தைகள் தெருவில் போகிற வருகிற பெண்கள் எல்லோருக்கும் பின்னால் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலைகிறார்கள்'.
மேர்வ் ஹியூஸ் (Merv Hughes)
மேர்வ் ஹியூசின் நகைச்சுவை கிரிக்கெட் உலகம் அறிந்தது. ஒருமுறை இவரைப் பார்த்து பாகிஸ்தானின் குழப்படிகாரனான மியண்டாட் ‘உன்னைப் பார்த்தால் எங்கள் ஊரில் இருக்கும் ஒரு குண்டான பஸ் கொண்டக்டர் போல இருக்கிறது' என்று கிண்டல் செய்திருக்கிறார். அன்றைக்கு சொல்லில் இருந்த வேகம் மியண்டாட்டுக்கு செயலில் இருக்கவில்லை. ஹியூசின் பந்திலேயே ஆட்டமிழந்த மியண்டாட்டைப் பார்த்து ஹியூஸ் கத்தினார் ‘டிக்கெட்டைக் காட்டிட்டுப் போ' என்று. இதைத்தான் தடி கொடுத்து அடி வாங்குவது என்பார்கள். இதே ஹியூஸ் ஒருமுறை அடிக்கடி சேர். விவியன் ரிச்சார்ட்ஸை அண்டிகுவா மைதானத்தில் நடந்த ஒரு போட்டியில் முறைத்துப் பார்த்துக் கடுப்பேத்தினார். ரிச்சார்ட்ஸ் அவரைக் கூப்பிட்டு ‘ இது என்னுடைய நாடு, என்னுடைய கலாச்சாரம். இங்கே நீ என்னை முறைத்துப் பார்க்கக் கூடாது. உன்னுடைய வேலை பந்து வீசுவது மட்டுமே' என்றார். துரதிர்ஷ்டவசமாக ஹியூசின் பந்திலேயே ஆட்டமிழந்தார். ஹியூஸ் சொன்னார் ‘எந்த ஊரிலும் போய் அந்த ஊர் ஆட்களை f**k-off என்று திட்டிக் கலைப்பதுதான் எங்கள் காலாச்சாரம்' இப்படி அடி கொடுத்த ஹியூஸ் அடிவாங்கிய சந்தர்ப்பமும் உண்டு. ஒரு முறை இங்கிலாந்துக்கு எதிராக ஆடியபோது ஹியூஸ் வீசிய ஒரு பந்தை மிகவும் கஷ்டப்பட்டு சமாளித்தார் இங்கிலாந்தின் ரொபின் ஸ்மித். ‘உனக்கு batting வரவேயில்லையே.. நீயெல்லாம எதுக்காக கிரிக்கெட் ஆடுகிறாய்?' என்றிருக்கிறார் ஹியூஸ். அடுத்த பந்தை பவுண்ட்ரிக்கு அடித்த ஸ்மித் சொன்னார், 'என்ன ஒற்றுமை பார்த்தாயா? எனக்கு batting தெரியாது, உனக்கு bowling தெரியாது'. "நண்பர் ஒருவருடயா வல்லைப்பூ இருந்து பெறப்பட்டது" இந்த வசைகள் மிகவும் மோசமான சொற்களைப் பாவித்து பேசப்பட்டவை. என்னால் முடிந்த அளவுக்கு நாகரிகப் படுத்தி இருக்கிறேன். இவற்றைவிடப் புகழ் பெற்ற மோசமான வசைகள் பல இருக்கின்றன. அவற்றை எல்லாம் தமிழ்ப் படுத்தி எழுத முடியாது. விரும்பினால் கூகிளாண்டவரிடம் கேட்டு ஆங்கிலத்தில் படிக்கலாம். ஆக, இத்துடன் ‘கிரிக்கெட் வசைபாடிகள்' விடைபெறுகிறார்கள்.

நீங்கள் இறக்கும் திகதியை அறிந்து கொள்ள வேண்டுமா?

இங்கே அழுத்தவும் check you're death day

இன்டெல் நிறுவனம் கண்டுபிடித்த மைக்ரோ பிராசசர்கள்........

கம்ப்யூட்டருக்கெனச் செயல்படும் சிப்களை உருவாக்கித் தந்து தொடர்ந்து பல வியத்தகு முன்னேற்றங்களைக் கண்டு வரும் இன்டெல் நிறுவனம் தன் நாற்பதாவது ஆண்டு விழாவினைக் கொண்டாடியது. உலகெங்கும் இடம் பெற்றிருக்கும் மைக்ரோ பிராசசர்களைக் கண்டுபிடித்த இந்த நிறுவனம் வளர்ந்த விதத்தினைக் காணலாம்.

1971: முதன் முதலில் கால்குலேட்டர்களுக்கான 400ஓஏத் சிப்பினை இன்டெல் வழங்கியது. இதுதான் உலகின் முதல் மைக்ரோ பிராசசராக இருந்தது. சிப் அளவில் கம்ப்யூட்டர் ஒன்றின் செயல்பாடுகளை இது வழங்கியது.

1974: Blistering 5MHz என்ற சிப் தான் முதன் முதலில் ஐ.பி.எம். மற்றும் அதனைப் போன்ற கம்ப்யூட்டர்களுக்கென வடிவமைக் கப்பட்ட சிப் ஆகும். இதற்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றிதான் இன்டெல் நிறுவனத்தை முதல் 500 நிறுவனங்களில் ஒன்றாக மாற்றியது.

1982: இன்றைய கம்ப்யூட்டர்களின் முதல் வகை சிப்பாக 286 வழங்கப்பட்டது. இதிலிருந்துதான் பிராசசர் குடும்பம் தோன்றியது. முன்னாளில் எழுதிய சாப்ட்வேர் தொகுப்புகள் மற்றும் பைல்களையும் ஏற்றுக் கொள்ளும் பிராசசராக இது இயங்கியது.

1985: இரண்டு லட்சத்து 75 ஆயிரம் ட்ரான் சிஸ்டர்களுடன் வடிவமைக்கப்பட்ட முதல் சிப். இதனை 386 எனப் பெயரிட்டு அழைத்தனர்.

1989: முதன் முதலாக மேத்ஸ் பங்சன்களுடன் அமைக்கப்பட்ட சிப் 486. குழப்பமான மேத்ஸ் செயல்பாடுகளை சென்ட்ரல் பிராசசரிடம் இருந்து பெற்று இயங்கும் சிப்பாக இது அமைந்தது.

1994: முதல் பென்டியம் சிப் கிடைத்து. இது 100 மெகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கியது. பேச்சு, ஒலி, கை எழுத்து, போட்டோ இமேஜஸ் ஆகிய அனைத்தையும் எளிதாக ஒருங்கிணைத்துச் செயல்படுத்தும் சிப்பாக இது உருவானது.

1995: ஒர்க் ஸ்டேஷன் கம்ப்யூட்டர்களுக்கும் 32 பிட் சர்வர்களுக்கும் என பென்டியம் புரோ சிப் வெளியிடப்பட்டது. ஒவ்வொரு சிப்பிலும் வேகத்தை அதிகப்படுத்த இரண்டாவதான கேஷ் மெமரிசிப்பினைக் கொண்டிருந்தது. இதில் 55 லட்சம் ட்ரான்சிஸ்டர்கள் இடம் பெற்றிருந்தன.

1996: 75 லட்சம் ட்ரான்சிஸ்டர்களுடன் எம்.எம்.எக்ஸ் தொழில் நுட்பத்துடன் பென்டியம் ஐஐ ஸியான் சிப் வெளியானது. வீடியோ, ஆடியோ மற்றும் கிராபிக்ஸ் வகைகளைக் கையாளும் வகையில் இது உருவாக்கப்பட்டது. இதிலும் கேஷ் மெமரி சிப் உள்ளடங்கி இருந்தது.

1999: பென்டியம் ஐஐஐ வெளியானது.வேகம் 500 மெகா ஹெர்ட்ஸ். இதன் மூலம் இன்டர்நெட் உலாவில் புதிய அனுபவம் கிடைத்தது. 95 லட்சம் ட்ரான்சிஸ்டர்கள் இதில் பொருத்தப்பட்டன.

2000: குறைந்த மின் செலவில் மொபைல் இன்டெல் செலிரான் சிப் தரப்பட்டது. இந்த செலிரான் சிப் குறைந்த விலையில் வெளியிடப்பட்டதால் கம்ப்யூட்டரின் மொத்த விலையும் குறைந்தது.

2001: பென்டியம் 4 சிப் வெளியானது. இதன் வேகம் அப்போது ஆச்சரியத்தைக் கொடுத்தது.1.5 பில்லியன் ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கியது.

2002: ஹைபர் த்ரெடிங் தொழில் நுட்பத்துடன் சிப் வெளியானது. ஒரே சிப்பில் இரண்டு ப்ராசசர்கள் இயங்கின.

2004: லேப் டாப் கம்ப்யூட்டர்களில் இயங்கத் தேவையான சென்ட்ரினோ சிப் வெளியானது. எங்கும் எடுத்துச் செல்ல இந்த சிப் பெரிய அளவில் வடிவமைக்க ப்பட்டிருந்தது.

2005: பென்டியம் 4 எக்ஸ்ட்ரீம் எடிஷன் வெளியானது.இதன் அதிவேக இயக்கம் கம்ப்யூட்டர்களில் கேம்ஸ் விளையாடுவோருக்கு அமுதமாக அமைந்தது.

2006: தற்போது பயன்பாட்டில் இருக்கும் கோர் டூயோ சிப் வெளியானது. இயங்கும் வேகம் மற்றும் திறமையான டிசைன் இந்த சிப்பினை உலக அளவில் பார்க்க வைத்தது.

2007: கோர் 2 குவாட் க்யூ 6600 (Core 2 Quad Q6600) என்ற சிப் வெளியானது. இன்றைய தொழில் நுட்பத்தின் சிறந்த வெளிப்பாடாக இது அமைந்தது.

2008: Atom Z540 என்ற பெயரில் எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்த உதவிடும் வேகமான இயக்க சிப் இது. பல புதிய நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி இது வடிவமைக்கப்பட்டது.

2009: The Core i7 desktop processor என்ற பெயரில் ,வேகம் மற்றும் திறமையான டிசைன், பல புதிய நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட திறமையான டிசைன்.


Facebook

ஃபேஸ் புக்கில் அதிக நேரம் செலவிடுபவரா நீங்கள்? (நான் அப்படித்தான் என்பது வேறு கதை) அதுவும் திருமணமானவராயோ, அல்லது காதலன்/காதலி உள்ளவராயோ இருந்தால் இதை வாசியுங்கள். உங்கள் உறவில் (கணவன்- மனைவி, காதலன-காதலி) விரிசல் விழுவதற்கு ஃபேஸ் புக்கும் ஒரு காரணமாகலாமாம். குவெல்ப் பல்கலைக்கழக (University of Guelph) மாணவர்கள் நிகழ்த்திய ஆய்வறிக்கையின் படி எவ்வளவு அதிகநேரம் ஃபேஸ் புக்கில் இருக்கும் இப்படியான ஜோடிகளுக்கிடையே பொறாமையும் சந்தேகமும் அதிகரித்திருப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. உதாரணமாக ஒருவரது ஃபேஸ் புக் Wallல் 'நேற்றிரவு உன்னுடனான சந்திப்பு இனிமையாக இருந்தது' என்பது போன்ற ஒரு சின்ன தகவல் பரிமாற்றமே பூதாகரமான பிரச்சினையாக வடிவெடுக்கும் வாய்ப்பு இருப்பதாக அந்த ஆய்வு மேலும் தெரிவித்திருக்கிறது. அந்தப் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்கும் 308 மாணவ, மாணவிகளிடம் எடுக்கப்பட்ட ஆய்வின் முடிவே இது. எல்லாவற்றிலும் நல்லது கெட்டது இருக்கிறது. பார்க்கும் கண்களிலும், பகுத்தறியும் அறிவிலும் இருக்கிறது சூட்சுமம் என்பது என் கருத்து.

யார் தகுதியானவர்?

ஒரு இந்திய-அமெரிக்கக் கூட்டுக் கம்பனி. அதில் ஒரே ஒரு பொசிஷன் மட்டுமே காலியாக இருந்தது. அந்த வேலையின் Job Description ஐப் பார்த்து யாருமே விண்ணப்பிக்கவில்லை, மகேஷ் பாபு, ஜோசப் விஜய் தவிர. அது கொஞ்சம் அதிகமாகவே இந்தியாவைப் பற்றியும் அமெரிக்காவைப் பற்றியும் தெரிந்தவர்கள் மற்றும் நல்ல பொது அறிவு உள்ளவர்கள் மட்டுமே சமாளிக்கக் கூடிய வேலையென்பதால் கம்பனி இருவரின் இந்தியா மற்றும் அமெரிக்கா பற்றிய அறிவையும் பொது அறிவையும் சோதிக்கத் தீர்மானித்தார்கள். ஏதாவது கேள்விக்கு விடை தெரியாவிட்டால் ‘எனக்குத் தெரியாது' என்று பதிலளிக்க வேண்டும். ஊகத்தில் தவறான பதிலளித்தால் -1 மார்க்.
மகேஷ் பாபு சொன்ன பதில்கள் வருமாறு. சரியான பதில்கள் அடைப்புக்குள்
  • அமெரிக்காவின் மிகப் பெரிய மாநிலம் எது? விடை: அலாஸ்கா. (அலாஸ்கா)
  • உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய பரப்பளவு கொண்ட நாடு எது? விடை: கனடா. (கனடா)
  • எந்த கோல்ஃப் ஆட்டக்காரரின் அம்மா தாய்லாந்தில் பிறந்தவர்? (கோல்ஃப் வீரர் அமெரிக்காவில் வசிக்கிறார்). விடை:டைகர் வூட்ஸ். (டைகர் வூட்ஸ்)
  • அமெரிக்க ஜனாதிபதி ஜான்.எஃப்.கென்னடியைக் கொன்றவனது பெயர் என்ன? விடை: எனக்குத் தெரியாது. (லீ ஹார்வி ஒஸ்வால்ட்)
  • இந்திய சுதந்திர தினத்தன்று இன்னொரு நாடும் சுதந்திர தினம் கொண்டாடுகிறது. அந்த நாடு எது? விடை: எனக்குத் தெரியாது. (தென் கொரியா)
  • ஐக்கிய நாடுகள் அமைப்பு எந்த வருடம் உருவாக்கப்பட்டது? விடை: 1945. (1945)
  • ஆங்கிலக் கால்வாயின் நீளம் என்ன? விடை: எனக்குத் தெரியாது. (564 கி.மீ)
  • உலக சுற்றுச் சூழல் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? விடை: ஜூன் 5. (ஜூன் 5)
  • சதுரங்க ஆட்டத்தில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற இந்தியாவைச் சேர்ந்த முதல் பெண் யார்? விடை: கோனெரு ஹம்ப்பி. (கோனெரு ஹம்ப்பி)
  • குத்துச்சண்டை எந்த வருடத்தில் சட்டரீதியான போட்டியாக்கப்பட்டது? விடை: எனக்குத் தெரியாது. (1901)
  • டெஸ்ட் கிரிக்கட்டில் வேகமான சதம் பெற்றவர் விவியன் ரிச்சார்ட்ஸ். இரண்டாவது இடம் யாருக்கு? விடை: அடம் கில்கிறிஸ்ட். (அடம் கில்கிறிஸ்ட்)
  • 1973ம் வருடம் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளில் புகழ் பெற்ற ஆஸ்திரேலியரான ராட் லேவர் இரண்டாவது சுற்றிலேயே வெளியேறினார். அவரை வீழ்த்தியது யார்? விடை: விஜய் அமிர்தராஜ். (விஜய் அமிர்தராஜ்)
  • உலகிலேயே அதிக ஊழியர்களைக் கொண்ட ரயில்வே அமைப்பு எது? கிட்டத்தட்ட எத்தனை ஊழியர்கள் வேலை பார்க்கிறார்கள்? விடை: இந்திய ரயில்வே, 1.4 மில்லியன் பேர். (இந்திய ரயில்வே, 1.4 மில்லியன் பேர்)
  • சபின் (Sabin) வக்சீன் மூலம் தடுக்கப்படும் நோய் எது? விடை: எயிட்ஸ். (போலியோ)
  • இந்தியாவின் நடப்பு ரயில்வே அமைச்சர் யார்? விடை: மம்தா பேனர்ஜி (மம்தா பனர்ஜி)
ஜோசப் விஜய் சொன்ன பதில்கள் வருமாறு. சரியான பதில்கள் அடைப்புக்குள்
  • அமெரிக்காவின் மிகப் பெரிய மாநிலம் எது? விடை: அலாஸ்கா. (அலாஸ்கா)
  • உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய பரப்பளவு கொண்ட நாடு எது? விடை: கனடா. (கனடா)
  • எந்த கோல்ஃப் ஆட்டக்காரரின் அம்மா தாய்லாந்தில் பிறந்தவர்? (கோல்ஃப் வீரர் அமெரிக்காவில் வசிக்கிறார்). விடை:டைகர் வூட்ஸ். (டைகர் வூட்ஸ்)
  • அமெரிக்க ஜனாதிபதி ஜான்.எஃப்.கென்னடியைக் கொன்றவனது பெயர் என்ன? விடை: எனக்குத் தெரியாது. (லீ ஹார்வி ஒஸ்வால்ட்)
  • இந்திய சுதந்திர தினத்தன்று இன்னொரு நாடும் சுதந்திர தினம் கொண்டாடுகிறது. அந்த நாடு எது? விடை: எனக்கும் தெரியாது. (தென் கொரியா)
  • ஐக்கிய நாடுகள் அமைப்பு எந்த வருடம் உருவாக்கப்பட்டது? விடை: 1945. (1945)
  • ஆங்கிலக் கால்வாயின் நீளம் என்ன? விடை: எனக்குத் தெரியாது. (564 கி.மீ)
  • உலக சுற்றுச் சூழல் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? விடை: ஜூன் 5. (ஜூன் 5)
  • சதுரங்க ஆட்டத்தில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற இந்தியாவைச் சேர்ந்த முதல் பெண் யார்? விடை: கோனெரு ஹம்ப்பி. (கோனெரு ஹம்ப்பி)
  • குத்துச்சண்டை எந்த வருடத்தில் சட்டரீதியான போட்டியாக்கப்பட்டது? விடை: எனக்குத் தெரியாது. (1901)
  • டெஸ்ட் கிரிக்கட்டில் வேகமான சதம் பெற்றவர் விவியன் ரிச்சார்ட்ஸ். இரண்டாவது இடம் யாருக்கு? விடை: அடம் கில்கிறிஸ்ட். (அடம் கில்கிறிஸ்ட்)
  • 1973ம் வருடம் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளில் புகழ் பெற்ற ஆஸ்திரேலியரான ராட் லேவர் இரண்டாவது சுற்றிலேயே வெளியேறினார். அவரை வீழ்த்தியது யார்? விடை: விஜய் அமிர்தராஜ். (விஜய் அமிர்தராஜ்)
  • உலகிலேயே அதிக ஊழியர்களைக் கொண்ட ரயில்வே அமைப்பு எது? கிட்டத்தட்ட எத்தனை ஊழியர்கள் வேலை பார்க்கிறார்கள்? விடை: இந்திய ரயில்வே, 1.4 மில்லியன் பேர். (இந்திய ரயில்வே, 1.4 மில்லியன் பேர்)
  • சபின் (Sabin) வக்சீன் மூலம் தடுக்கப்படும் நோய் எது? விடை: எயிட்ஸ். (போலியோ)
  • இந்தியாவின் நடப்பு ரயில்வே அமைச்சர் யார்? விடை: மம்தா பேனர்ஜி (மம்தா பனர்ஜி)
விடைகளை ஒப்பிட்டுப் பார்த்த நிர்வாகிக்கு அதிர்ச்சி. இருவருமே 15 ல் பத்துக் கேள்விகளுக்கு சரியான விடையையும், ஒரு கேள்விக்குப் பிழையான விடையையும், 4 கேள்விகளுக்கு எனக்குத் தெரியாது என்றும் பதிலளித்திருந்தனர். இருவரில் ஒருவர் ஈயடிச்சான் காப்பி அடித்திருக்கிறார். அவர் யாரென்று சொல்லமுடியுமா?
பி. கு : தெலுங்கு சினிமாவில் மகேஷ் பாபு என்ற நடிகரின் படங்களை ஜோசப் விஜய் என்ற தமிழ் சினிமா நடிகர், அறிமுகமாகும் காட்சிகள், பாடல்கள் என்பவற்றை அப்படியே காட்சிக்குக் காட்சி காப்பி அடித்து நடிப்பதனால், அதே பெயர்களைக் கொண்ட இந்தப் போட்டியாளர்களும் அப்படியே நடந்து கொள்வார்கள். எனவே ஜோசப் விஜய்தான் ஈயடிச்சான் காப்பி என்ற என்ற விடை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. நண்பர் ஒருவருடயா வல்லைப்பூ இருந்து பெறப்பட்டது

Tuesday, August 25, 2009

ஆரம்பித்து இருக்கிறேன்

என்னால் ஆனா சில துளிகள்

கைக்கு அருகில் உள்ள முதல் கடமையை ஆற்றுங்கள்; அடுத்த கடமை என்ன என்பது தன்னாலே புலப்படும்.

அன்பை விற்கவோ, வாங்கவோ முடியாது. அன்பிற்கு அன்பே விலை

வாக்குவாதம் செய்யாதே. உனது மதத்தினிடத்தும் கொள்கையினிடத்தும் உனக்கு எப்படிப் பற்று இருக்கிறதோ அப்படியே மற்றவர்களுடைய மதங்களிலும் கொள்கைகளிலும் அவரவர்களும் பற்று வைக்கும்படியான உரிமையை அவர்களுக்குக் கொடு. வாக்குவாதத்தினால் மட்டும் மற்றொருவனுடைய பிழையை எடுத்துக் காட்ட முடியாது.

ஒப்பிட்டுப் பார்ப்பதை மனம் நடத்திக் கொண்டிருந்தால் அங்கே உண்மையான அன்பு இருக்க முடியாது.

செல்லும் பாதை சரியாக இல்லாதபோது,வேகமாக ஓடி என்ன பயன்

பக்கத்து வீட்டுக்காரன் உங்கள் உறவினனை விட நெருங்கியவன்

சிறந்த தகவல்களை வைத்திருப்பவரே வாழ்க்கையில் மிகவும் வெற்றிகரமான மனிதர் என்பது பொது விதி.

சிக்கல் எது என்று அறிவது முதல் சிக்கல். அதை அறிந்தாலே பாதி சிக்கல் தீர்ந்துவிடும்.

சோதனைகள் தாம் ஒரு மனிதனை அவனுக்கு அறிமுகப்படுத்துகின்றன

நம்முடைய உறுதியான அபிப்பிராயத்தைப் பிறர் வாயால் கேட்க எவ்வளவு மகிழ்ச்சி

அன்பில் வணிகத்திற்கு இடமில்லை; வணிகத்தில் அன்பிற்கு இடமில்லை.