Saturday, August 29, 2009

ஆச்சரியம் ஆனால் உண்மை ....

21 வாரம் மட்டுமே ஆனா குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் போது ஒரு கொடிய நோய்க்கு ஆளானது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம். அதுவும் தாயின் கர்பப்பையை வெளியே எடுத்து ஒரு சின்ன துளை இட்டு அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இத்தகைய அறுவை சிகிச்சையில் கைதேர்ந்த மருத்துவரான Joseph Bruner, இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். அந்த தாயின் கர்ப்பபையை வெளியே எடுத்து அறுவை சிகிச்சை செய்து முடிக்கும் தருவாயில் ஒரு மிக சிறிய கை ஒன்று அவரின் விரலை சிக்கென பற்றி கொண்டது ..ஆமாம் அது கர்ப்பபையில் இருத்த அந்த குழந்தையின் கை தான்.. ஒரு நொடி உறைந்து பொய் விட்டார் அந்த மருத்துவர் இந்த படத்தை தான் மேலே காண்கிரீர்கள்.. சிகிச்சை முடிந்து அந்த குழந்தையும் தாயும் நலமாக உள்ளனர். அந்த குழந்தையின் பெயர் Samuel Alexander Armas . google search பண்ணி பாருங்கள் மேலும் விபரம் அறிய..

No comments: